Saturday, March 4, 2017

Thursday, June 4, 2015

நாயும் நாமும் - சில தகவல்கள் அல்லது நாயுடன் வாழ்தல்

நாய் ......நன்றியுள்ள மிருகம்.மனிதன் நன்றிகெட்ட மிருகம் என்று அர்த்தமல்ல....ஆனால்  அவனை அப்படி யாரும் சொன்னதில்லை என்பதிலிருந்தே நாயின் உயர்வு புரிகிறது;நமக்கும் சற்று உறைக்கிறது.








மேலும் நன்றிமறந்த மனிதனையும் ''நன்றிகெட்ட நாய்'' என்றுதான் சொல்கிறோமே தவிர நன்றிகெட்ட மனிதன் என்று அல்ல.
அதுபோல் சண்டைகள் ஏற்பட்டால் கண்ட கண்ட நாய்க்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் சொல்கிறார்களே அன்றி ''மனிதனுக்கெல்லாம் '' என்று அல்ல.






எனவே இவ்வாறான சிறப்புக்கள் பெற்ற நாய் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

நாயின் விஞ்ஞானப்பெயர்  canis lupus என்பது.ஏறக்குறைய 13 வருடங்கள் ஆயுட்காலம் கொண்ட நாய் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்கள் உறங்கும்.


உலகில் சுமார் 700 மில்லியன் நாய்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.இதில் 50 வகையான நாய் இனங்கள் பிரதானமாக உள்ளன.


நாய் மனிதனுக்கு செய்யும் உதவிகள் சொல்லி மாளாது.வேட்டையாட,மந்தை மேய்க்க ,பொருட்கள் தூக்க,பாதுகாப்பாளனாக,police ராணுவத்துக்கு உதவுவோனாக,ஊனமுற்றோர்களின் வலதுகரமாக என்று தன் வாழ்க்கையே மனிதனுக்காக அர்ப்பணித்துள்ளது.






















நமக்கெல்லாம் மூதாதையர் குரங்கு போல் நாய்களின் மூதாதையர்கள் வேறு யார் நம்ம நரியார்தான்.

''கல்லைக்கண்டால் நாயைக்காணோம் நாயைக்கண்டால் கல்லைக்காணோம் ''என்று நாம் சொல்லிக்கொண்டிருக்க அவர்கள் நாய்க்காகவே ஹோட்டல் எல்லாம் திறக்கிறார்கள்.இங்கே திருமணம் கூட நடத்தி வைக்கிறார்கள்.நாய்க்கு இருக்கும் மதிப்பு கூட மனிதனுக்கு இல்லை.நாய்க்கும் கேவலமாக மனிதன் ஆகிறான்.

மேலும் ,மிகப்பெரிய நாயாக english mastiff விளங்குகிறது. இதன் நிறை 155.6 kg என்பதுடன் நீளம் 250 cm ஆகும்.மிக சிறிய நாய் york shire terrier.இதன் நிறை 113 கிராம்.

இவ்வாறெல்லாம் சிறப்புக்கள் கொண்ட-விண்வெளிக்கே சென்று வந்த- நாயை கேவலப்படுத்தும் விதமாக சில நாய்கள்-மன்னிக்கவும்-சில மனிதர்கள் பேசுவதை கண்டால் கடித்து குதறலாம் போல் இருப்பது தவிர்க்க முடியாதது.







                                                         வவ் வவ் .....(நன்றி...)

Sunday, December 14, 2014

இலகு கணிதம் -காணொளி



கணிதத்தை எவ்வளவு இலகுவாகக் கூறித்தருகிறார் பாருங்கள்.நாங்கள் படிக்கும் காலத்தில் இப்படி யாரும் சொன்னதில்லையே....!!!!





Sunday, October 26, 2014

பொய் சொல்பவரை கண்டுபிடிப்பது எப்படி?

இன்றைய உலகில் பொய் மெய்யாகவும் மெய் பொய்யாகவும் மாறியுள்ளது என்பது பொய்யல்ல.




ஆகவே ஒருவர் உண்மையை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது நம் உடலுக்கும் உளத்துக்கும் நல்லது.

பொய்யர்களின் கதையை நம்பி மெய்யை ( உடல்) புண்ணாக்கியவர்கள்தான்  உலகில் அதிகம்.




பொய் சொன்ன வாய்க்கு பொரியும் கிடையாது என்பதை பொய்யாக்கி பொய் சொன்னால்தான் எரியும் அடுப்பு என்பதை மெய்யாக்கியவர்களும் உலகில் அதிகம்.

என்றாலும் முதலில் யார் முதலில் வருவது என்பது  முக்கியமல்ல ; இறுதியில் யார் முதலில் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் இறுதியில் வெல்வது என்னவோ மெய்தான்.

ஆகவேதான் இந்த பொய்யை மெய்யாக்கும் பொய்யர்களை கண்டுபிடிப்பது எப்படி? என்கிற இந்த ஆய்வு முடிவுகள் முக்கியமாகின்றது.

உடல் மொழி மூலம் இவர்களை அடையாளம் காணலாம்.என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

அறிகுறிகள்.

1. இவர்கள் நேருக்கு நேர் கண்ணோடு கண் பார்த்து கதைக்க மாட்டார்கள்.
2. முகம் அல்லது கழுத்து அல்லது வாயை தொட்டுக்கொண்டு பேசுதல்.
3. உணர்ச்சியை உடனே வெளியிடாமை .
4. உணர்ச்சிக்கும் சொல்லும் சொல்லுக்கும் இடையே வேறுபாடு காணப்படல்.
5. பொய் சொல்பவர் எப்போதும் எதிர் தாக்குதலுக்கு தயாராகவே இருப்பார்.(சொல் அல்லது உடல் )
6. நாம் கேட்கும் கேள்வியையே பதிலாக மாற்றி கூறுவார்கள்.உதாரணம் நீ இந்த பிஸ்கட்டை எடுத்தாயா? என்று கேட்டால் நான் அந்த பிஸ்கட்டை எடுக்கவில்லை என்று கூறல்.
7. பெரும்பாலும் நேரடியாக பதில் சொல்லமாட்டார்கள்.
8. அதிகம் கதைக்க மாட்டார்கள்.அல்லது தவிர்ப்பார்கள்.



எனவே இவ்வாறான அறிகுறிகளை வைத்து பொய் சொல்பவரை இனம் காணுவோமாக.........