Sunday, October 26, 2014

பொய் சொல்பவரை கண்டுபிடிப்பது எப்படி?

இன்றைய உலகில் பொய் மெய்யாகவும் மெய் பொய்யாகவும் மாறியுள்ளது என்பது பொய்யல்ல.




ஆகவே ஒருவர் உண்மையை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது நம் உடலுக்கும் உளத்துக்கும் நல்லது.

பொய்யர்களின் கதையை நம்பி மெய்யை ( உடல்) புண்ணாக்கியவர்கள்தான்  உலகில் அதிகம்.




பொய் சொன்ன வாய்க்கு பொரியும் கிடையாது என்பதை பொய்யாக்கி பொய் சொன்னால்தான் எரியும் அடுப்பு என்பதை மெய்யாக்கியவர்களும் உலகில் அதிகம்.

என்றாலும் முதலில் யார் முதலில் வருவது என்பது  முக்கியமல்ல ; இறுதியில் யார் முதலில் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் இறுதியில் வெல்வது என்னவோ மெய்தான்.

ஆகவேதான் இந்த பொய்யை மெய்யாக்கும் பொய்யர்களை கண்டுபிடிப்பது எப்படி? என்கிற இந்த ஆய்வு முடிவுகள் முக்கியமாகின்றது.

உடல் மொழி மூலம் இவர்களை அடையாளம் காணலாம்.என்று கண்டுபிடித்துள்ளார்கள்.

அறிகுறிகள்.

1. இவர்கள் நேருக்கு நேர் கண்ணோடு கண் பார்த்து கதைக்க மாட்டார்கள்.
2. முகம் அல்லது கழுத்து அல்லது வாயை தொட்டுக்கொண்டு பேசுதல்.
3. உணர்ச்சியை உடனே வெளியிடாமை .
4. உணர்ச்சிக்கும் சொல்லும் சொல்லுக்கும் இடையே வேறுபாடு காணப்படல்.
5. பொய் சொல்பவர் எப்போதும் எதிர் தாக்குதலுக்கு தயாராகவே இருப்பார்.(சொல் அல்லது உடல் )
6. நாம் கேட்கும் கேள்வியையே பதிலாக மாற்றி கூறுவார்கள்.உதாரணம் நீ இந்த பிஸ்கட்டை எடுத்தாயா? என்று கேட்டால் நான் அந்த பிஸ்கட்டை எடுக்கவில்லை என்று கூறல்.
7. பெரும்பாலும் நேரடியாக பதில் சொல்லமாட்டார்கள்.
8. அதிகம் கதைக்க மாட்டார்கள்.அல்லது தவிர்ப்பார்கள்.



எனவே இவ்வாறான அறிகுறிகளை வைத்து பொய் சொல்பவரை இனம் காணுவோமாக.........


3 comments:

  1. பொய்யை மறைப்பது எப்படி?

    பொய் பேசும்போது கண்சிமிட்டல் அதிகரிக்கிறது. குரலில் இருக்கும் மாற்றங்கள், கண்மணி விரிவடைதல் போன்ற தடயங்கள் பொய்யர்களை அடையாளம் காட்டும்.

    பொய் சொல்வதில் உள்ள சிக்கல், நமது ஆழ்மனம் தன்னிச்சையாகவும், பொய் வார்த்தைகளுக்கு எதிராகவும் செயல்படுவதால் நமது உடல்மொழி காட்டிக் கொடுத்து விடுகிறது. இதனால் தான் அரிதாக பொய் சொல்பவர்கள் எவ்வளவு நம்பும்படியாக சொன்னாலும் பிடிபட்டு விடுகிறார்கள். அவர்கள் சொல்ல ஆரம்பித்த உடனேயே அவர்களது உடல் முரண்பாடான சைகைகளை வெளிப்படுத்துகிறது. இதிலிருந்து அவர்கள் உண்மையைச் சொல்லவில்லை என்பது தெரிகிறது.

    பொய் கூறும்போது அவர்களது ஆழ்மனம் அனுப்பும் நரம்பு சக்தி ஒரு சைகையாக வெளிப்பட்டு வாய் வார்த்தைகளோடு முரண்படுகிறது. அரசியல்வாதிகள், வக்கீல்கள், நடிகர்கள், தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் போன்ற தொழிலில் உள்ளவர்கள் பொய் பேசும்போது தங்கள் உடல் அசைவுகளை நன்கு பயன்படுத்துவதால் அவர்கள் கூறும் பொய்யைக் கண்டறிவது கடினம்.

    புன்னகை பொய் சொல்வதற்கான அடையாளம் என்று பெரும்பாலானவர்கள் நினைப்பதால், அவர்கள் தாங்கள் பொய் சொல்வதைக் குறைத்து விடுகிறார்கள். ஒரு உண்மையான புன்னகையை விட, பொய்யான புன்னகை வேகமாக வெளிபடுகிறது. நீண்ட நேரம் நீடிக்கிறது. பொய் பேசுபவன் புன்னகைக்கும் போது, முகமுடி அணிந்ததை போல் தோன்றுகிறது. ஒரு பொய்யான புன்னகை முகத்தின் ஒரு பக்கத்தை விட மறுபக்கத்தில் அதிகமாக வெளிப்படுகிறது. முளையின் இரண்டு பக்கங்களுமே புன்னகையை உண்மையாக்க முயல்வதால், இப்படி ஏற்படுகிறது. முகபாவங்களை கையாளும் பகுதி முளையின் வலது பக்கத்தில் இருப்பதால், உடலின் இடது பக்கத்திற்கே தகவல்களை அனுப்புகிறது. இதனால் முகத்தின் வலது பக்கத்தை விட இடது பக்கத்தில் தான் பொய்யான உணர்வுகள் அதிகமாக வெளிப்படுகின்றன. உண்மையான முகத்தின் இரண்டு பக்கங்களையும் கட்டுபடுத்துகின்றன.

    பொய் பேசுபவர்கள் பொதுவாக, சில வெளிப்படையான சைகைகளை வெளிபடுத்து கின்றனர். அவை,

    வாயை முடுவது

    பொய்யான வார்த்தைகளை அழுத்தி விடும்படி ஆழ்மனம் கட்டளையிடுவதால் வாயை கை முடுகிறது. சில சமயம் சில விரல்கள் அல்லது முஷ்டியால் இறுக்க முடுவதன் முலம் வாயை மறைக்கலாம். ஆனால், அர்த்தம் ஒன்றுதான். இப்படி வாயை முடும் சைகையை மறைக்க சிலர் பொய்யாக இருமுவார்கள். யாராவது பேசும்போது இப்படி செய்தால் அவர்கள் பொய் சொல்லலாம். நீங்கள் பேசும்போது அவர் தன் வாயை முடிக் கொண்டால் நீங்கள் எதையோ மறைப்பதாக அவர் நினைப்பதாக அர்த்தம்.

    வாயை முடுவதை உதடுகளின் மேல் சுட்டு விரலை வைத்து `உஷ்’ என்பது போலும் செய்யலாம். இப்படி செய்பவரின் அம்மாவோ, அப்பாவோ அடிக்கடி இப்படி செய்திருக்கலாம். தான் நினை ப்பதை கூற வேண்டாம் என்று அவர் தனக்குத் தானே கட்டளையிட இப்படி செய்யலாம். உள்ளே மறைத்ததை வெளியே காட்டுவதற்காகவே இப்படி செய்கிறார்கள். உங்கள் பெற்றோரோ அல்லது ஆசிரியரோ நீங்கள் குழந்தையாக இருக்கும் போது இவ்வாறு செய்திருப்பார்கள்.

    காலரை இழுப்பது

    பொய் கூறுவதால், முகம் மற்றும் கழுத்தின் கீழுள்ள திசுக்களில் குறுகுறுவென்ற ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது. அப்போது, தேய்க்கும் போதோ அல்லது சொறியும்போதோ தான் அதைத் திருப்தி செய்ய முடியும். இதனால் தான் நிச்சயமற்ற நிலையில் உள்ளவர்கள் கழுத்தை சொறிவார்கள். இதனால், பொய் சொல்பவர்கள், தங்களை பிறர் கண்டுபிடித்து விட்டார்கள் என்று சந்தேகிக்கும்போது காலரை இழுக்கிறார்கள். ஏமாற்றுவதால், ரத்த அழுத்தம் அதிகமாவது, கழுத்தில் வியர்ப்பது போன்றவற்றின் முலம் அவர் பொய் சொல்வது உங்களுக்கு தெரிந்து விடும்.
    காட்டிக் கொடுக்கும் சைகைகள்

    பொய் சொல்பவர்கள் தங்கள் முக்கிய உடல் சைகைகளை வேண்டுமென்றே கட்டுபடுத்தி விட்டாலும், பல சிறிய அசைவுகள் அதையும் மீறி வெளிபட்டு விடும். முக தசை சுருக்கம், கண்மணி சுருங்கி விடுதல், வியர்த்தல், கன்னம் சிவத்தல், கண்ணைத் தேய்ப்பது, நிமிடத்திற்கு பத்து முறை கண்சிமிட்டுவது 50 முறை கண்சிமிட்டுவதாக அதிகரிப்பு, முக்கைத் தொடுவது போன்ற சில சிறு சைகைகள் பொய்யை வெளிபடுத்தி விடும். இந்த சிறிய அசைவுகள் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் தோன்றி மறையலாம். நேர்முகத்தேர்வு நடத்துபவர்கள் விற்பனை பிரதிநிதிகள், மிகவும் நுட்பமானவர்களால் மட்டுமே இவற்றை உணரமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி http://senthilvayal.com/2010/04/17/பொய்யை-மறைப்பது-எப்படி/

      Delete